இவ்வாறிருக்கையில் ஒருநாள் மானிப்பாயைச் சேர்ந்த பெரும் பிரமுகரான திரு. சம்மந்தமூர்த்தி அவர்கள் அவ்விடத்துக்கு வந்து வழிபட்டுக் கொண்டு இருந்த வேளை அந்த ஐவகை மரத்திலிருந்து ஓர் ஒளி தோன்றி மறைந்தது. அவருக்கு அது பெரும் அதிசயமாக இருந்தது. அவர் வீடு சென்று உணவருந்தி உறங்கிக் கொண்டிருக்கும் போது விநாயகப் பெருமான் கனவில் தோன்றி நான் இருக்க இடமில்லாமல் ஆதரவின்றி இருக்கிறேன். அந்த ஐவகை மரத்தின் கீழ் என்னை வைத்து ஆலயம் அமைப்பாயாக! என்று கூறி மறைந்தார் |